Wednesday 9 December 2009

இளைய நிலா பொழிகிறதே,,,,






என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் இது ஓன்று ,..அதனாலோ என்னவோ இதை பாடி ஒரு வீடியோ போடும் அளவுக்கு வைத்தது ..எல்லாம் நண்பர்களின் உதவியோடுதான், திரைப்படம் : பயணங்கள் முடிவதில்லை
இசை : இளையராஜா
பாடியவர் : S.P. பாலசுப்பிரமணியம்
பாடல் : வைரமுத்து
வெளியான ஆண்டு : 1980

பாடல் வரிகள்...
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே
விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
----------------------------------

முடிஞ்சா முழுவதும் கேளுங்க ,,

Friday 27 November 2009

அந்த நாள் ஞாபகம்



எனக்கு நினைவில் தோன்றிய என் சின்ன வயது நினைவுகள் ,எங்க ஊர் வழக்கிலே எழுதிட்டேன்,, ஒரு நடுததர குடும்பத்தில் பிறந்தவன்,,அதுக்கு என்னன்னு கேக்குறீங்களா??.........நீங்களும் அப்டி இருந்தால் ஒரு வேளை இது உங்களுக்கும் ஒன்றி போகலாம்,,,,
எழுத்து பிழைகள் இருந்தால்??...,,,ஒண்ணுமில்ல நீங்களே திருத்தி படிச்சிக்குங்க ,,,..இனி..,,,,,,
அப்போசுமார் ஒன்பது அல்லது பத்து வயசு இருக்கும்,அந்த நாட்களில் காலையில் குளித்து விட்டு ஈரத்தலையோடு ,வந்து நின்னா அம்மா இங்க வா மக்கா தலைய ஒழுங்கா தொடச்சிக்க ,சளி,புடிச்சிரும்,அப்டின்னு சொல்லிட்டே தலையில் அவங்களோட சேலைய எடுத்து துடச்சி,,காத ,ஊதுவாங்க,, அப்றோம் அந்த மஞ்ச நிக்கர் ,எடுத்து போட்டு விட்டு ஒரு சட்டையும் போட்டு விடுவாங்க ,,,
இந்த நேரம் ,ஒரு கிழவி வெளிய இட்லி கொண்டு வரும் ..அத ஒரு தட்டுல வாங்கி,சட்னி கூட சிவப்பு கலர் ல இருக்கும்,,கிழவியும் கேக்கும் பள்ளியோடதுக்கு போறியா மக்கா ,,அம்மா அந்த இட்லிய பிசஞ்சு,தின்னு மக்கான்னு ,கூட போட்டிக்கு தம்பி வேற இதே situation ல நிப்பார் ,,,அந்தால, கைய கழுவிட்டு school,,,,
அங்க சில பல comedy கள் ,,முடிஞ்சி சாயங்காலம்,,வீடு வரும்போது, யா மக்கா சட்டய இப்புடி அழுகாகிருக்க,,,போய் கைய கால கழுவிட்டு ,,வா ,கிழங்கு அவிச்சி பானையில இருக்கு ,தின்னு ன்னு , அந்த நேரம் எனக்கு வேண்டாம் பொறவு திம்பேன் , சொல்லிட்டே நடையில நின்னுட்டு ,எம்மா நா கோயில் நடைக்கு வ்ளாட போறைன்,லே நில்லு மக்கான்னு அவுங்க ,போ மா ,ன்னு சொல்லிட்டு பயங்கர ஓட்டம் ,,
அங்க போனா ஒரு gang தயாரா இருக்கும் ,ஒருத்தன் மூக்கு ஒழுகிட்டு இருக்கும் ,ஒருத்தன் கரெக்டா சட்ட பட்டன் எல்லாத்தையும் தப்பா போட்டுருப்பான் ,,ஒரு பிள்ள petty code ன்னு ஒண்ணு போட்ருக்கும்.,,அனா கடைசில அந்த பிள்ள பயக்கள்ட்ட அடிவாங்கிட்டு,எல்லாருக்க வட்டபேரையும்,எல்லாரும் கேக்குறமாதிரி ,போல ஊழ மூக்கன் ,,வயித்தாளி,நக்கி,ன்னு அழுதுட்டே போகும்,,நம்மளும் பதிலுக்கு அவ பேர வச்சி வாயில வர்றதா அடிச்சி விடுறது ,,
அப்டி இப்டின்னு கள்ளம் போலீஸ் ,,ஐஸ் பால்,எல்லாம் வ்ளாடிட்டு,முக்கிய கட்டத்துல ஒருத்தன் சொல்லுவான் லே நீ out ன்னு ,,போல,ன்னு நம்ம,,சமந்தமே இல்லாம கோயில் ஆணை உடுல,ன்னு சொல்லுவான் ,,
நம்மளும் கோயில் ஆணை {சத்தியம்},,out இல்லன்னு சொல்லும்போது,,பக்கத்துல 2 கிழவன் மார்,இருந்துட்டு, சீ பெய உள்ளேளா,,கோயில கொண்டு ஆணை உடுறீங்களா ,,கொப்பன {அப்பா}கண்டுட்டு ன்னு பயமுறுத்துவார் ,இப்படிக்கும் அந்த கிழடுகள் கோயில் நடையில் இருந்து பீடி குடிப்பா இருக்கும் ,,
இப்டி சீரியஸா போயிட்டு இருக்கும்போது ,தம்பி வருவான் லே அண்ணா அப்பா வந்தாச்சு போ உன்ன கூட்டிட்டு வரசொல்லிச்சு,அங்க போன உடனே எப்பா அண்ணன் வந்துட்டான்,அவரு ஒரு மட மீசை வச்சிட்டு மூன்று முகம் வில்லன் செந்தாமரை மாதிரி ,விளையாட்டு கூடி போச்சு போய் மூஞ்ச கழுவிட்டு இப்போ புக் எ தொரந்துருக்கணும் ,கடைக்கி பேட்டு வர்றேன் ன்னு வெள்ள, வேஷ்டிய மடிச்சி கட்டிட்டு கிளம்புவார்.
அம்மா ராத்ரி சாப்பட்டுக்கு மீன் கரி வைக்கதுல மும்மரமா இருப்பாங்க ,,மெதுவா எம்மா அப்பாட்ட பொறி கடல வாங்க சொல்லுமா,,அவாள் நமக்கு வேண்டி மீன் கையோட எய்யா ,புள்ளேளுக்கு ,,,ன்னு சொல்லும்போதே,,அப்பா ஆங் ன்னு சொல்லிடு போவார்,,டக்குன்னு ,,ஓடி போய் அடுக்களை ல ,,போய் இது என்ன மீனு மா ,,அவாள் சாள,மீனு யா,நீ போய் படி ,,அப்பா இப்போ வந்துரும் மக்கான்னு,சொல்லிட்டு அம்மா உனக்கு சூடா கறி வச்சிதருவேன்,தம்பிய பாத்துக்க ,,அவன பாத்தா நல்ல உறக்கமாயிருக்கும்.
அப்பா வர்ற சத்தம்,,கேட்ட உடனே,தெரிஞ்ச ஒரு இங்கிலீஷ்,பாட்ட எடுத்து படிப்பு ,,i know a face,,i know a face,i know a face,ன்னு ஒரே லைன் எ ,அஞ்சு தடவ படிச்சிட்டு இருக்கும்போது ,,உள்ள வருவார் ,,புக் எ லைட்டா இறக்கிட்டு கையில கடல வாங்கியிருகாரான்னு பாத்துட்டு,,இருக்கும்போது அம்மா எய்யா சோற போடட்டா ,கொழம்பு கொதிச்சிட்டு ன்னு,,அப்போ பாருங்க ,அந்த வாசனைய புடிசிக்கிடே,நாக்குல தண்ணி ஊரும் இப்போ நினைச்சாலும்,ஊருது,,அப்பா போய் மெதுவா தம்பிய எழுப்புவாறு, அந்த நேரம் பானை , கரி சட்டி எல்லாம் நடு வீட்டுக்கு வரும் ,,
கீழ உக்காந்து சம்மணக்கால் போட்டு வயிறு முட்ட அடிக்கிறது ,,,அந்த நேரம் தம்பி ரெண்டு உருண்ட தின்னுட்டு அம்மா மடியிலே உறங்கிருவான் ,,பக்கத்துல அப்பா சாப்டுவாறு அவர் தட்டுல 3 மீனு இருக்கும் அதுல பக்குவமா முள்ள எடுத்து நம்ம தட்டுல வச்சி,தின்னு மக்கா ன்னு ,சொல்லுவார்,அத இப்போ நினைச்சாலும் கண், கலங்க்குடு அப்ப அப்ப .திட்டுனாலும்,பாசத்த காமிக்கும் போது,அம்மாக்களையும் தூக்கி சாப்பிட்டு விடுவார்கள் .
எல்லாம் முடிச்சிட்டு தூங்க போரமுன்னாடி ,அம்மா மக்கா போய் ,ஒண்ணுக்கு இருந்துட்டு வந்து படு ன்னு, அந்தால இருந்துட்டு வந்து பாய ,போட்டு கால தூக்கி அம்மாக்க மடியில போட்டு ,,தூங்குனா,வருமே,,ஒரு தூக்கம்,கொய்யால,கோடி ரூவா குடுத்தாலும்,கிடைக்காது,,,எல்லாம்,,ஒரு சுகமான நேரங்கள்

Thursday 26 November 2009

வணக்கம்


எல்லோருக்கும் என் முதல் வணக்கம் ..நானும் ரௌடிதான் ங்கற மாதிரி,,உள்ள வந்தாச்சு எதோ தோணுறது எழுதணும்,,திட்டுறவங்க திட்டிட்டு போங்க ,,,பாராட்டுறவங்க பரிசு குடுத்து பாராட்டுங்க ஹி ஹி ,,,எத பத்தி எழுதுறதுன்னு எனக்கே தெரியல ..யோசிக்கிறேன்,,,